முஹம்மது ரமூஜீதீன்
ரியாத் - சவுதிஅரேபியா நடைபெரும் தவருகள் திருத்தப்படவேண்டியது தேவையான அவசியமான ஒன்றே ஆனால் அதனை திருத்துவதற்க்கு எடுக்கும் முயற்ச்சியில் அதீத கவணம்வேண்டும் எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையும் சாதிக்கஇயலாது என்பதனை கருத்தில்கொண்டு நம் நடவடிக்கைகள் அமையவேண்டும். இன்ஷா மாற்றமுடியாத ஒன்று எதவுமில்லை அதற்க்கு சரியான முயற்ச்சியும் தேவை.அல்லாஹ் நாம் அனைவருக்கும் நல் ஹிதாயத்தை தந்திடுவானாக.
பனி அப்தால்
அனைத்து நபிமார்களின் வாழ்க்கையும் அல்லல் நிறைந்ததுதான். எந்த ஒரு நபியும் சோதனைக்குள்ளாகாமல் இருந்ததில்லை, முஹம்மது (ஸல்-அலை) உள்பட. கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பல நபிமார்களும் அவர்களுடைய மனைவிகளும், அல்லாஹ்வின் சோதனைகளுக்கு அப்பாற்பட்டு, இருவருக்குள்ளும் மிகுந்த பாசத்தோடு வாழ்ந்ததாக, நமக்கு கிடைக்கும் குறிப்புகள் அறியத்தருகின்றன. அந்த அடிப்படையில் புதுமணத் தம்பதியினரை வாழ்த்துவதில் தவறில்லை என் நினைக்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, முஹம்மது (ஸல்-அலை) அவர்கள் வாழ்த்திய முறையில் வாழ்த்துவது சாலச்சிறந்தது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
எம்முறையில் வாழ்த்தினாலும், ஒரு மனிதனுடைய வாழ்க்கை நிலை அவனுடைய செயல்பாடுகளையும், அச்செயல்பாடுகள் அவனுடைய எண்ணத்தையும் பொருத்தே இருக்கும் என்பது இறைத்தூதரின் வாக்கு. "எண்ணம்போல் வாழ்க" என்று வாழ்த்துவது, இன்றும் தமிழகத்தில் ஹிந்து மத மக்களின் ஒரு பிரிவினரிடையே பழக்கத்தில் உள்ளது.
இருப்பினும் தற்போது நம்மிடையே உள்ள நடைமுறையை மாற்ற முயற்சிக்கும்போது, இதில் சம்பந்தப்பட்டிருப்பவர்களுக்கு புரியவைத்து, பின்பு மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம். இதில், திருமணத்தை நடத்தி வைக்கும் நிர்வாகம் மட்டுமல்லாது, மண ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் இரு வீட்டாரையும் புரியவைத்து ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும்.
நெருடல் ஏற்படுத்துவது யூசுப்- ஜுலைஹா சரித்திரக் கதைகள்.. தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வேண்டும் எனபதில் வேறு கருத்து இருக்க முடியாது.
நீண்ட நெடுங்காலமாக எல்லா ஜமாஅத்களிலும் இருந்து வரும் இப்பழக்கம் நம் அடியக்கமங்கலம் ஜமாஅத்திலும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. மாற்றத்திற்கு தீவிர முயற்சியும், சாத்வீகமான அணுகுமுறையும் அவசியம்.
மக்களின் மனதில் அல்லாஹ் நற்சிந்தனையை தந்தருள்வானாக. ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக