திங்கள், 26 டிசம்பர், 2011

வன்மையாக கண்டிக்கிறோம்


அன்பு நிறைந்த அடியக்கமங்கலம் முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.
 நமதூரில் பல ஆண்டுகளுக்கு முன் அல்லாஹுவின் மார்கத்தில் தடை செய்யப்பட்ட அனாச்சாரமான சினிமா கச்சேரி வான வேடிக்கை மற்றும் நடனம் நாட்டிய குதிரைகள் இன்னிசை பாடல் திருமணத்தில் கேலி பாடல்கள் பாடுவது போன்ற இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட நிகழ்ச்சிகளை ஊரின் நலன் கருதி தடை செய்தார்கள் 
இதனை தமிழக முஸ்லிம் ஊர்களுக்கெல்லாம் முன்மாதிரியான 
முஸ்லிம் கிராமம் அடியக்கமங்கலம் 
என மறுமலர்ச்சி இஸ்லாமிய வார இதழ் தலையங்கம் எழுதியது அல்ஹம்துலில்லாஹ் பல இஸ்லாமிய நாடுகளில் கூட போடமுடியாத ஒரு தடை சட்டத்தை நிறை வேற்றிய அல்லாஹுவின் அருள் பெற்ற ஊராக திகழ்ந்து வந்த நமதூரில் கடந்த இரண்டு வருடமாக இஸ்லாமிய இன்னிசை கச்சேரி என்ற பெயரில் மார்க்கத்தில் தடை செய்யபட்ட வல்லமை மிக்க அல்லாஹுவிடம் கடுமையான தண்டனைக்குரிய பாவமான நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்ட கூத்து கச்சேரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகின்றன இதனை அல்லாஹுக்காக மிக மிக மிக வன்மையாக கண்டிக்கிறோம் இந்த பாவமான நிகழ்ச்சிகளுக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்தீர்களோ பொருளாதார உதவி செய்கிறீர்களோ இன்னும் யாரெல்லால்ம் முன்னின்று நடத்துகிறீர்களோ யாரெல்லாம் இந்தகூத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்களோ சகோதரர்களே அல்லாஹுவிடம்அழுது பாவமன்னிப்பு தேடி கொள்ளுங்கள் மவ்த்து எந்நேரமும் நம்மை வந்து சேரும் மரணத்திற்கு பிறகுள்ள வாழ்கையை எண்ணி பாருங்கள் தனி மனிதனின் தவறுகள் அவனை மட்டுமே சாரும் ஆனால் பலரும் சேர்ந்து செய்யும் பாவமான காரியம் பாவத்தில் செய்த செய்ய தூண்டிய மற்றும் பாவத்தை தடுக்காத அனைவரின்மீதும் அல்லாஹுவின் தண்டனை இறங்கி விடும் கருணை மிக்க அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாகஆமின் என்று பிராத்திப்பதோடு பாவமான கச்சேரி நிகழ்ச்சியை அல்லாஹுவின் தண்டனையை அஞ்சி அல்லாஹுவுக்காக உடனே தடை செய்யுமாறு அடியக்கமங்கலம் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறோம் 
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நாளை மறுமை நாளில் ஒவ்வொரு மனிதனும் பொருளாதாரத்தை எவ்வாறு சேர்த்தான்  எவ்வாறு செலவு செய்தான் என வினவப்படுவான் என்றார்கள் 
அன்பு நிறைந்த சகோதரர்களே நாம் அல்லாஹுவை அஞ்சி நன்மக்களாக வாழ்வோமாக மேலும் கச்சேரி நிகழ்ச்சியை தடை செய்ய உங்களின் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு தெருவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் ஆலோசனை வழங்கும் யாருடைய பெயரையும் அவர்களின் அனுமதுயின்றி வெளியிட மாட்டோம் என உறுதி அளிக்கிறோம் 
முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?

இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,
‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

கருத்துகள் இல்லை: